போலி எழுத்துக்கள் என்றால் என்ன

தமிழ் மொழி மிகத் தொன்மையான இலக்கணச் செறிவும், துல்லியமான எழுத்துத் தொழிற்பாடும் கொண்ட ஒரு மொழியாகும். ஒரு சொல்லின் தொடக்கம், இடைப்பகுதி மற்றும் முடிவு ஆகிய இடங்களில் எந்தெந்த எழுத்துகள் வரலாம் என்பதைத் தொல்காப்பியம் முதற்கொண்டு பிற்கால இலக்கண நூல்கள் வரை தெளிவாக வரையறுத்துள்ளன.

போலி எழுத்துக்கள்
போலி எழுத்துக்கள்

சொற்கள் உருப்பெறும்போது எழுத்துகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைக் கற்றுக்கொள்வது மொழித்தூய்மையைப் பேணவும், பிழையற்ற நடைக்கும் இன்றியமையாதது. இக்கட்டுரையில், சொல்லில் எழுத்து மாறினும் பொருள் மாறாத போலி எழுத்துகள், தமிழ்ச் சொற்களின் தொடக்கமாக அமையும் மொழி முதல் எழுத்துகள், பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்யும் நெறிமுறைகள் மற்றும் சொல்லின் இறுதியாக அமையும் மொழி இறுதி எழுத்துகள் குறித்து விரிவாக ஆராய்வோம்.

1. போலி எழுத்துகள்

சில சமயங்களில் ஒரு சொல்லில் குறிப்பிட்ட ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறோர் எழுத்தைப் பயன்படுத்தினாலும் அச்சொல்லின் பொருள் மாறுபடாமல் இருப்பது உண்டு. அது போலி எழுத்து எனப்படுகிறது.

போலி எழுத்துகளும் இலக்கணச் செல்லுபடி கொண்டவை என்பதால் இலக்கண நூலார் இவற்றை "வழு" (பிழை) எனப் புறந்தள்ளுவதில்லை. இருப்பினும், போலி எழுத்துகளை வலிந்து புகுத்தாமல் இயல்பாக எழுதுவதே மொழிக்கு அழகு சேர்க்கும்.

போலி எழுத்துக்கள்

போலி எழுத்துகள் சொல்லில் இடம்பெறும் இடத்தைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

1.     முதற்போலி (சொல்லின் முதலில் வருவது)

2.     இடைப்போலி (சொல்லின் இடையில் வருவது)

3.     கடைப்போலி (சொல்லின் இறுதியில் வருவது)

அ. முதற்போலி (Initial Substitution)

சொல்லின் முதலெழுத்து மாறி வந்தாலும் பொருள் மாறாமல் இருப்பது முதற்போலியாகும்.

இயல்புச் சொல்

போலிச் சொல்

மூல எழுத்து

போலி எழுத்து

ஔவை

அவ்வை

அவ்

பௌத்தம்

பவுத்தம்

பௌ

பவு

நண்டு

ஞண்டு

மயல்

மையல்

மை

மையம்

மய்யம்

மை

மய்

ஐயர்

அய்யர்

அய்

நாயிறு

ஞாயிறு

நா

ஞா

பையன்கள்

பசங்கள்

பை

யாமம்

சாமம்

யா

சா

 

 

ஆ. இடைப்போலி (Medial Substitution)

சொல்லின் இடையெழுத்து மாறி வந்தாலும் பொருள் மாறாமல் இருப்பது இடைப்போலியாகும்.

இயல்புச் சொல்

போலிச் சொல்

மூல எழுத்து

போலி எழுத்து

அரசன்

அரைசன்

ரை

ஈயல்

ஈசல்

நிலயம்

நிலையம்

லை

வலயம்

வலையம்

லை

கலயம்

கலையம்

லை

 

 

இ. கடைப்போலி (Final Substitution)

போலி எழுத்துக்கள்

சொல்லின் இறுதியெழுத்து மாறி வந்தாலும் பொருள் மாறாமல் இருப்பது கடைப்போலியாகும்.

இயல்புச் சொல்

போலிச் சொல்

மூல எழுத்து

போலி எழுத்து

அறம்

அறன்

ம்

ன்

பந்தல்

பந்தர்

ல்

ர்

கலம்

கலன்

ம்

ன்

குடல்

குடர்

ல்

ர்

மதில்

மதிள்

ல்

ள்

செதில்

செதிள்

ல்

ள்

அரும்பு

அரும்பர்

பு

அர்

இன்பம்

இன்பு

பம்

பு

இயை

இசை

யை

சை

பிசை

பியை

சை

யை

இலக்கணக் குறிப்பு:, , ய ஆகிய எழுத்துக்களின் முன்னே இடம்பெறும் “அ”கரம் “ஐ”காரமாகவும், ஐகாரம் “அ”கரமாகவும் பெரும்பாலும் மாற்றமுறுகின்றன என்பது இலக்கணநூலார் கருத்தாகும். போலி எழுத்து தோன்றுவதால் சொற்களின் இலக்கணப் பெறுமதியில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.

 

போலி எழுத்துக்கள்


2. மொழிக்கு முதலாக வரும் எழுத்துகள்

தமிழில் அனைத்து எழுத்துக்களும் ஒரு சொல்லின் முதலெழுத்தாக அமைந்துவிட முடியாது. இலக்கண நூல்களில் குறிப்பிடப்பட்ட எழுத்துகளைத் தவிர வேறு எழுத்துகள் முதலாக வந்தால், அது தூய தமிழ்ச்சொல் அன்று என்பதை அறியலாம்.

அ. உயிர் மற்றும் ஆய்த/மெய் எழுத்துகள்

  • 12 உயிர் எழுத்துகளும் (அ முதல் ஔ வரை) மொழிக்கு முதலில் வரும்.
    • எ.கா: அம்மா, ஆசை, இயல்பு, ஈச்சை, உறவு, ஊர்வன, எழுச்சி, ஏற்றம், ஐந்து, ஒற்றுமை, ஓசை, ஔவியம்.
  • ஆய்த எழுத்தும் (ஃ), மெய் எழுத்துகளும் (க், ச்...) மொழிக்கு முதலாக ஒருபோதும் வரமாட்டா.

ஆ. உயிர்மெய் எழுத்துகள்

உயிர்மெய் எழுத்துகளில் , , , , , , , , , ஆகிய 10 வரிசைகள் மொழிக்கு முதலில் வரும் இயல்புடையவை.




1. 12 உயிர்களோடும் இணைந்து முதலாக வரும் எழுத்துகள் (க, , , , , ம)

போலி எழுத்துக்கள்


வரிசை

எடுத்துக்காட்டுகள்

கலை, காகம், கிளி, கீற்று, குயில், கூட்டம், கெடு, கேள்வி, கைலை, கொள்கை, கோயில், கௌரவம்

சட்டி, சாரல், சிலை, சீற்றம், சுவை, சூடு, செல்வம், சேதம், சைகை, சொல், சோர்வு, சௌமியம்

தம்பி, தாரை, திக்கு, தீமை, துவை, தூக்கு, தெரு, தேடல், தையல், தொடு, தோழமை, தௌவல் (அழிவு)

நன்று, நாடு, நிலை, நீளம், நுரை, நூறு, நெகிழ்ச்சி, நேர்மை, நையாண்டி, நொச்சி, நோற்றல், நௌவி (மான்)

படை, பாடல், பிசை, பீடை, புசி, பூண்டு, பெருமை, பேறு, பையன், பொறுமை, போற்று, பௌத்தம்

மரை, மாண்பு, மிடறு, மீசை, முதல், மூப்பு, மென்மை, மேன்மை, மையல், மொழி, மோப்பம், மௌனம்

(குறிப்பு: மெய்யில் ஔகாரம் ஏறிய கௌ, சௌ, தௌ, நௌ, மௌ, வௌ, யௌ போன்ற பல சொற்கள் தற்காலத்தில் வழக்கிழந்து வருகின்றன.)

2. குறிப்பிட்ட சில உயிர்களுடன் மட்டும் முதலாக வரும் எழுத்துகள்

போலி எழுத்துக்கள்

  • ''கரம் (8 உயிர்கள்):, , , , , , , ஔ ஆகிய 8 உயிர்களுடன் இணைந்து வரும்.
    • எ.கா: வலிமை, வாட்டம், விடுதலை, வீடு, வெற்றி, வேட்டை, வையகம், வௌவால்.
  • ''கரம் (6 உயிர்கள்):, , , , , ஔ ஆகிய 6 உயிர்களுடன் இணைந்து வரும்.
    • எ.கா: யவனம், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
  • ''கரம் (4 உயிர்கள்):, , , ஒ ஆகிய 4 உயிர்களுடன் இணைந்து வரும்.
    • எ.கா: ஞமலி (நாய்), ஞானம், ஞெகிழி (சிலம்பு), ஞொள்கல் (மெலிதல்).
  • ''கரம்: பழங்காலத்தில் "ஙனம்” என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் முதலாக வந்தது. "ஙப்போல் வளை" என்ற வழக்கு இதனாலேயே வந்திருக்கலாம். ஆனால், இன்றைய வழக்கில் ஙகரம் தனித்து முதலாக வருவதில்லை; எங்ஙனம், இங்ஙனம், அங்ஙனம் என வினா/சுட்டெழுத்துகளுடன் சேர்ந்தே வடிவம் பெறுகிறது. ஆறுமுகநாவலரும் தமது இலக்கணச் சுருக்கத்தில் ''கரத்தைச் சொல்லின் முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை.

3. '', '' கர வரிசைச் சொற்கள் (பிறமொழித் தழுவல்)

போலி எழுத்துக்கள்


தற்காலத் தமிழில் '' மற்றும் '' வரிசை எழுத்துகள் சொல்லின் முதலில் எழுதப்படும் வழக்கம் பரவலாகி உள்ளது. இருப்பினும், இவை தமிழிலக்கணச் செம்மையாகக் கருதப்படுவதில்லை.

இவற்றைத் தமிழ் இலக்கண நெறிக்கு உட்படுத்த , , ஆகிய உயிர் எழுத்துகளை முன்னொட்டாகச் சேர்த்து எழுத வேண்டும்:

பிறமொழி / தற்கால வழக்கு

தமிழிலக்கண நெறிமுறை வடிவம்

ரகசியம், ராகம், ருசி, ரூபம்

ரகசியம், ராகம், ருசி, ருவம் / ரூபம்

ரெட்டை, ரேகை, ரொக்கம், ரோகம்

ரட்டை, ரேகை, ரொக்கம், ரோகம்

லட்சம், லாவண்யம், லிங்கம், லீலை

லட்சம், லாவணியம், லிங்கம், லீலை

லேகியம், லோகம், லௌகிகம்

லேகியம், லோகம், லௌகிகம்

(இதே விதி ''கர வரிசைச் சொற்களுக்கும் பொருந்தும்.)

போலி எழுத்துக்கள்

4. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்

சொற்களின் இறுதியில் முடிவடையும் எழுத்துகளுக்கும் தமிழில் தெளிவான விதிகள் உள்ளன.

அ. உயிரெழுத்து ஓசைகள்

''கரம் தவிர்ந்த ஏனைய 11 உயிரெழுத்து ஓசைகளும் சொற்களின் இறுதியில் வரவல்லன:

உயிர் ஓசை

எடுத்துக்காட்டு

பல

கடா

விழி

தீ

படகு

பூ

எங்கே

ஓசை

நொ (துன்பம்)

போ

கௌ (பற்றிப்பிடி)

ஆ. மெய்யெழுத்துகள்

11 மெய்யெழுத்துகள் மட்டுமே சொல்லின் இறுதியில் வர முடியும்:

ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்

  • எடுத்துக்காட்டுகள்: உரிஞ், கண், வெரிந் (முதுகு), மனம், பொன், மெய், பார், வேல், தெவ் (பகை), பாழ், கோள்.
  • (குறிப்பு: இக்காலத்தில் ஞ், ந், வ் ஆகிய மெய்கள் இறுதியாக வரும் சொற்கள் பெருமளவில் பயன்பாட்டில் இல்லை.)
போலி எழுத்துக்கள்

இறுதியில் வராத மெய்கள்: வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும், மெல்லின மெய்யான 'ங்' என்பதும் ஒருபோதும் சொல்லின் இறுதி எழுத்துகளாக வாரா.

தமிழ் மொழியின் தனித்துவத்திற்கும் தொன்மைச் சிறப்புக்கும் அதன் கட்டமைப்பு சார்ந்த இலக்கண விதிகளே மூலக்காரணமாகும். போலி எழுத்துகள் மொழியின் நெகிழ்வுத்தன்மையைக் காட்டினாலும், சொல் அமைப்பில் மொழி முதல் மற்றும் இறுதி எழுத்துகளுக்கான விதிகள் மொழியின் தூய்மையைப் பாதுகாக்கின்றன.

குறிப்பாக, பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஆளும்போது அ, , உ போன்ற உயிரெழுத்துகளை முதலாகச் சேர்த்து எழுதுவது தமிழ் இலக்கண நெறியைப் பேண உதவும். இவ்விதிகளைப் புரிந்து கொண்டு எழுதுவது பிழையற்ற தமிழ் நடைக்கும், மொழியின் வளத்திற்கும் வழிவகுக்கும்.

 

Share: