50 பழமொழிகள் தமிழ்

 50 பழமொழிகள் தமிழ் என்ற இந்த பதிவில் 50 இற்கும் மேற்பட்ட பழமொழிகள் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. அவற்றினை உங்களுக்கு Pdf வடிவில் தொகுத்துள்ளோம். அதனை உங்களுக்கு தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் 50 பழமொழிகள் மற்றும் அவற்றுக்கான கருத்துக்களும் கீழே தரப்பட்டுள்ளன.

50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்



50 பழமொழிகள் தமிழ் (1-20)

 

1.   அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

ü  விடா முயற்சி

 

2.   அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

ü  முன்மாதிரி

 

3.   ஆழம் அறியாமல் காலை விடாதே

ü  ஆராய்ந்து செய்

 

4.  ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்

ü  காலம் மாறி வரும்

 

5.   இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை

ü  திருப்திப்படாத மனம்



50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்


 

6.  இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை

ü  தருமஞ் செய்

 

7.   உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்

ü  உலோபங் கூடாது

 

8.  எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லாக்கு

ü  வீண் பெருமை

 

9.  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

ü  இளமையிற் செய்

 

10.  கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

ü  நம்பிக்கை காக்கும்

 

11.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு

ü  ஒற்றுமையே பலம்

 

12.  அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்

ü  உத்தம நட்பு

 

13.  இரக்கப் போனாலும் சிறக்கப்போ

ü  வறுமையிற் செம்மை


14.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்.

ü  கோபம் சிந்தனைக்கு இடையூறு

 

15.  உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ü  நன்றி மற வேல்


 

50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்


16.  உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

ü  தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.

 

17.  தன் வினை தன்னைச் சுடும்.

ü  பிறருக்குச் செய்யும் தீங்கு தனக்கே தீங்காக முடியும்.

 

18.  சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

ü  எதையும் குறைவாக மதிப்பிடக் கூடாது.

 

19. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

ü  மனநிறைவே ஒருவனுக்குச் சிறந்த செல்வமாகும்.

 

20. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

ü  இளமையில் பழகிய பழக்கம் வயதானாலும் வரும்.


50 பழமொழிகள் தமிழ் (20-40)

 

50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்

21.  முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.

ü  தெண்டித்தவர் வெற்றி பெறுவார்.

 

22. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

ü  மனச்சாட்சி உறுத்தும்.

 

23. சாண் ஏற முழம் சறுக்கும்.

ü  உயர்ச்சியை மிஞ்சிய தளர்ச்சி

 

24. செல்வமென்பது சிந்தையின் நிறைவே

ü  மனத்திருப்தியே பெரிய செல்வம்

 

25. துஷ்டரைக் கண்டால் தூர விலகு

ü  தீமை என்று தெரிந்தால் விலகுதல் அழகு

 

26. நெருப்பின்றி புகையாது

ü  காரணமின்றி காரியம் நிகழாது


27. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது

ü  சிறியதின் சிறப்பு

 

28. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

ü  ஒன்றின் அருமை இன்னொரு சந்தர்ப்பத்தில் தெரியும்.

 

29. இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து

ü  இளம் வயதுக் கல்வி நிலைத்திருக்கும்.

 

30. கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்

ü  உலகை அறியாத நிலை



50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்


 

31.  பொறுத்தார் பூமியாள்வார்.

ü  பொறுமையின் முக்கியத்துவம்

 

32. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

ü  பயனற்ற கல்வி

 

33. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ü  ஒற்றுமை

 

34. கந்தையானாலும் கசக்கிக் கட்டு

ü  வறுமையிலும் செம்மை

 

35. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

ü  சந்தர்ப்பத்தை தவறவிடக் கூடாது

 

36. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

ü  திறமையில் நம்பிக்கை

 

37. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

ü  விடா முயற்சி பலன் தரும்

 

38. காகம் திட்டி மாடு சாகாது

ü  பழிக்குப் பயப்படாதே

 

39. குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி மங்காது

ü  நற் புகழ் மங்குவதில்லை


40. ஆனைக்கும் அடிசறுக்கும்.

ü  பெரியவர்களும் தவறு விடலாம்.


50 பழமொழிகள் தமிழ் (40-63)

 

50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்

41.  ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு

ü  எதையும் அளவோடு செய்தல் வேண்டும்.

 

42. அடாது செய்தவன் படாது படுவான்.

ü  கேடு செய்பவர் துன்பம் அனுபவிப்பார்.

 

43. பேராசை பெரு நட்டம்.

ü  எல்லை கடந்த ஆசை துன்பம் தரும்.

 

44. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

ü  சுகதேகியாக வாழ்வதே பெருஞ் செல்வம்.

 

45. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

ü  நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பயனில்லை.

 

46. ஆடையில்லா மனிதன் அரை மனிதன்.

ü  உடையின் மகிமை

 

47. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

ü  பகை அழிவைத் தரும்.

 

48. பதறாத காரியம் சிதறாது.

ü  நிதானமாகச் சிந்தித்துச் செய்யும் செயல் வெற்றி தரும்.

 

49. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

ü  சுவையில்லாத உணவினால் பயன் கிடையாது.

 

50. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

ü  தாயன்பின் மகிமை



50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்

 

51.  கூழானாலும் குளித்துக் குடி

ü  சுத்தத்தின் முக்கியத்துவம்

 

52. துள்ளுகிற மாடு பொதி சுமக்கும்.

ü  அடக்கம் இன்மை துன்பத்தை தரும்.


53. அழுத பிள்ளை பால்குடிக்கும்.

ü  முயற்சி செய்தவர் பயன் பெறுவர்.

 

54. விளையும் பயிரை முளையிலே தெரியும்.

ü  இளமையில் எதிர்காலம் புலப்படும்.

 

55. எட்டாக் கனிக்கு கொட்டாவி விடாதே

ü  கிடைக்காத ஒன்றிற்காக ஏங்குதல்

 

56. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

ü  எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.

 

57. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ü  ஒற்றுமையின் பலம்

 

58. வெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டும்.

ü  முன்னேற்பாடு

 

59. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

ü  மனட்சாட்சி உறுத்தும்


50 பழமொழிகள் தமிழ்
50 பழமொழிகள் தமிழ்
 

60. ஆறின கஞ்சி பழங் கஞ்சி

ü  காலத்தின் முக்கியத்துவம்

 

61.  மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

ü  போலியைக் கண்டு ஏமாறக் கூடாது

 

62. மின்னுவதொல்லாம் பொன்னல்ல

ü  கவர்ச்சியானவை எல்லாம் நல்லவை அல்ல

 

63. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது

ü  அனுபவம் ஆபத்து வராமல் தடுக்கும்.

              

Post a Comment

Previous Post Next Post