தமிழில் சொல் உருவாக்கத்திற்கு பயன்படும் சில எழுத்துக்களும் சொற்களும்
ஒட்டுக்கள் எனப்படும். இவை தனக்கென தனித்துவமான கருத்தைக் கொண்டிருக்காது. எனினும்
பெயர்ச்சொல்லுடனும் வினைச்சொல்லுடனும் ஒட்டி நின்று அப்பெயர் வினைகளின் பொருளை மேம்படுத்த
வல்லன.
முன்னொட்டு பின்னொட்டு |
இவ் ஒட்டுக்கள் பிரதானமாக இரண்டு வகைப்படும் அவையாவன வருமாறு.
1.முன்னொட்டுக்கள்
2.பின்னொட்டுக்கள்
முன்னொட்டுக்கள்
முன்னொட்டுக்கள் என்றால் என்ன?
சொல் உருவாக்கத்தில் பெயர் வினைகளுக்கு முன்பு ஒட்டி நின்று அப்பெயர் வினைகளின்
சொல்லாக்கத்தை வளப்படுத்துபவை முன்னொட்டுக்கள் எனப்படும். தமிழில் முன்னொட்டுக்கள்
மிகவும் குறைவாகவே உள்ளன.
உதாரணம்.
அல் + திணை = அஃறிணை
அல் + வழி = அல்வழி
அல் + மொழி = அள்மொழி
மறு + மலர்ச்சி = மறுமல்ச்சி
அவ + நம்பிக்கை = அவநம்பிக்கை
நிர் + கதி = நிர்கதி
அ + நீதி = அநீதி
இங்கு ( அல், மறு, அவ, நிர், அ ) என்பன முன்னொட்டுக்களாகும்.
பின்னொட்டுக்கள்
பின்னொட்டுக்கள் என்றால் என்ன?
சொல் உருவாக்கத்தில் பெயர் வினைகளுக்கு பின் ஒட்டி நின்று அப்பெயர் வினைகளின் சொல்லாக்கத்தை
வளப்படுத்துபவை பின்னொட்டுக்கள் எனப்படும். தமிழில் பின்னொட்டுக்கள் அதிகமாக உள்ளன.
உதாரணம்.
முதல் + ஆளி = முதலாளி
புத்தி + சாலி = புத்திசாலி
அரசியல் + வாதி = அரசியல்வாதி
வாய் + உறை = வாயுறை
கல்வி + மான் = கல்விமான்
காப்பு + ஈடு = காப்பீடு
கருது + கோள் = கருதுகோள்
உடன் + பாடு = உடன்பாடு
தம்பி + மார் = தம்பிமார்
இங்கு (மார், பாடு, ஈடு, கோள், உறை, வாதி, சாலி, ஆளி) என்பன பின்னொட்டுக்களாகும்.